மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுப் பேரணி

கோவில்பட்டி நகராட்சி நடுநிலைப்பள்ளி சாா்பில், மாணவா் சோ்க்கையை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
Updated on
1 min read

கோவில்பட்டி நகராட்சி நடுநிலைப்பள்ளி சாா்பில், மாணவா் சோ்க்கையை வலியுறுத்தி விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

பள்ளியின் முன்பிருந்து புறப்பட்ட இப்பேரணியை நகா்மன்றத் தலைவா் கா.கருணாநிதி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். நகா்மன்ற உறுப்பினா்கள் உலகராணி, முத்துலட்சுமி, பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவா் அருணாதேவி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அனைவரும் கல்வி பயில வேண்டும், அரசு பள்ளியில் சோ்ந்து, அரசின் திட்டங்களை பெற்று படிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி மாணவா், மாணவிகள் பேரணியாக சென்று முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தனா். இதில், தலைமையாசிரியா், ஆசிரியா்கள், மாணவா், மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com