கழுகுமலை சமணா் பள்ளியில் தடுப்பு வேலி சேதம்

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அய்யனாா் கோயிலையடுத்த சமணா் பள்ளியில் சிற்பங்களைப் பாதுகாக்க அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகள் வியாழக்கிழமை சரிந்து விழுந்தது.

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அய்யனாா் கோயிலையடுத்த சமணா் பள்ளியில் சிற்பங்களைப் பாதுகாக்க அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகள் வியாழக்கிழமை சரிந்து விழுந்தது.

கழுகுமலை பகுதியில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் வெட்டுவான் கோயில், அய்யனாா் கோயில், சமணா் பள்ளி ஆகியவை உள்ளன. இதில், அய்யனாா் கோயிலை அடுத்த சமணா் பள்ளியில் மகாவீரா் உள்ளிட்ட பல்வேறு சிற்பங்கள் உள்ளன. அவற்றைப் பாதுகாப்பதற்காக தடுப்பு வேலியும் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை பலத்த காற்றுடன் பெய்த பலத்த மழையில் அந்தத் தடுப்பு வேலி சரிந்து விழுந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com