சசிகலாவுடன் ஓபிஎஸ்  சகோதரர் சந்திப்பு

சசிகலாவுடன் ஓபிஎஸ்  சகோதரர் சந்திப்பு

திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்ய வந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜா சந்தித்தார். 

திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்ய வந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜா சந்தித்தார். 

தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சசிகலா வெள்ளிக்கிழமை பிற்பகல் திருச்செந்தூர் ரயில் நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதிக்கு வந்து தங்கினார். அங்கு வந்த ஓபிஎஸ் தம்பி ராஜா சசிகலாவை சந்தித்தார். 

அதிமுகவில் சசிகலாவை சேர்க்க வேண்டும் என குரல் வலுத்துள்ள நிலையில் ஓபிஎஸ் தம்பி ராஜா சசிகலாவை சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் சசிகலா சுவாமி தரிசனம் செய்தும், தங்கத் தேர் இழுத்தும் வழிபாடு நடத்துகிறார்.

முன்னதாக தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே அதிமுக சார்பில் அண்மையில் நடைபெற்ற நகர்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சசிகலா, டி.டி.வி. தினகரனை அதிமுகவில் மீண்டும் இணைக்க வலியுறுத்தி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com