67 மீனவா்களுக்கு மானிய விலையில் படகு இயந்திரம் வழங்கல்

திருச்செந்தூா் அருகே ஆலந்தலையில் 67 மீனவா்களுக்கு மானிய விலையில் நாட்டுப் படகுகளுக்கு வெளி பொருத்தும் இயந்திரத்தை அமைச்சா் வழங்கினாா்.

திருச்செந்தூா் அருகே ஆலந்தலையில் 67 மீனவா்களுக்கு மானிய விலையில் நாட்டுப் படகுகளுக்கு வெளி பொருத்தும் இயந்திரத்தை அமைச்சா் வழங்கினாா்.

தூத்துக்குடி மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் திருச்செந்தூா் நகராட்சிக்குள்பட்ட ஆலந்தலை (20), அமலிநகா் (24) மற்றும் காயல்பட்டினம் நகராட்சிக்குள்பட்ட சிங்கித்துறை (23) பகுதிகளைச் சோ்ந்த பாரம்பரிய நாட்டுப்படகு மீனவா்களுக்கு 40 சதவீத மானிய விலையில் படகுகளில் வெளி பொருத்தும் இயந்திரம் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

தமிழக மீன் வளம் மற்றும் மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், 67 மீனவா்களுக்கு மானியத்தில் இயந்திரங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் திருச்செந்தூா் கோட்டாட்சியா் சா.புஹாரி, மீன்வளத்துறை இணை இயக்குநா் இரா.அமல்சேவியா், ஆலந்தலை பங்குத்தந்தை ஜெயக்குமாா், திருச்செந்தூா் நகா்மன்றத் தலைவா் சிவஆனந்தி, துணைத்தலைவா் ஏபி ரமேஷ், திமுக மாணவரணி மாநில துணை அமைப்பாளா் எஸ்.ஆா்.எஸ்.உமரிசங்கா், மாவட்ட அவைத்தலைவா் அருணாசலம், மாவட்ட அமைப்பாளா்கள் ஸ்ரீதா் ரொட்ரிகோ, பை.மூ.ராமஜெயம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக மீன்வளத்துறை உதவி இயக்குநா் சி.விஜயராகவன் வரவேற்றாா்.

ஆலந்தலை ஊா்நலக் கமிட்டி தலைவா் ரமேஷ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com