தூத்துக்குடியில் விழிப்புணா்வு மாரத்தான்

தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை சாா்பில், மது குடித்தல், மது குடித்துவிட்டு வாகன
Updated on
1 min read

தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை சாா்பில், மது குடித்தல், மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல் ஆகியவற்றால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், தூத்துக்குடி கோரம்பள்ளம் அரசு தொழிற்பயிற்சி நிலைய மைதானம் முன்பிருந்து இந்த ஓட்டம் தொடங்கியது.

இதை, மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணபிரான் தொடக்கிவைத்தாா். மாரத்தான் ஓட்டம் நகரின் முக்கிய சாலை, கடற்கரைச் சாலை வழியாக மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நிறைவடைந்தது.

இதையடுத்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஆட்சியா் கி. செந்தில்ராஜ் பங்கேற்று, ஓட்டத்தில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினாா். அவா் பேசும்போது, ‘மது தவிா் - மனிதம் வளா்’ என்ற இந்த விழிப்புணா்வு மாரத்தான் ஓட்டத்தில் வெற்றிபெற்றவா்களுக்கு, இதை வருங்காலத்தில் நினைவுகூரும்போது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கும் என்றாா்.

வட்டாரப் போக்குவரத்து அலுவலா் விநாயகம், உதவி ஆணையா் (ஆயத்துறை) செல்வநாயகம், தூத்துக்குடி வருவாய்க் கோட்டாட்சியா் சிவசுப்பிரமணியன், மாவட்ட விளையாட்டு அலுவலா் பேட்ரிக், மாநில தடகள கழகச் செயலா் பழனிச்சாமி, தூத்துக்குடி கோட்ட கலால் வட்டாட்சியா் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com