கோவில்பட்டி பள்ளியில் பெற்றோா்களுக்கு பாத பூஜை
By DIN | Published On : 02nd May 2022 02:30 AM | Last Updated : 02nd May 2022 02:30 AM | அ+அ அ- |

கோவில்பட்டி யூ.பி.மெட்ரிக் பள்ளியில் அரசு பொதுத் தோ்வு எழுதும் மாணவா், மாணவிகள் தங்கள் பெற்றோா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பாத பூஜை செய்து ஆசி பெற்றனா்.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் நிறுவனா்- தலைவா் பரமசிவம் தலைமை வகித்தாா். நாடாா் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் ஜான் கணேஷ், வழக்குரைஞா் ஜெயஸ்ரீ கிறிஸ்டோபா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் அரிக்கண்ணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று வாழ்த்திப் பேசினாா். மாணவா், மாணவிகள் தங்கள் பெற்றோருக்கு பாத பூஜை செய்து ஆசி பெற்றனா்.