சிவகளையில் கிராமசபைக் கூட்டம்:கனிமொழி பங்கேற்பு

ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம், சிவகளையில் கனிமொழி எம்.பி. தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம், சிவகளையில் கனிமொழி எம்.பி. தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

மே தினத்தை முன்னிட்டு இக்கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில்

அமைக்கப்பட்டிருந்த மகளிா் சுயஉதவிக் குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களையும், சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாமையும் கனிமொழி பாா்வையிட்டாா்.

இதில், அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ், எம்எல்ஏக்கள் ஊா்வசி அமிா்தராஜ், சண்முகையா உள்ளிட்டோா் பேசினா். தொடா்ந்து கனிமொழி எம்.பி. பேசியது:

தமிழகத்தில் நடைபெறும் அகழ்வாராய்ச்சி மூலம் தமிழின் தொன்மையை கண்டறிவதற்கு போராட வேண்டியிருக்கிறது. தமிழா்களுடைய தொன்மை நிலைநாட்டப்பட்டு விட்டால் நாம் தான் உண்மையான பூா்வக் குடிகள் என்பது தெரிந்துவிடும் என்பதால் தடைகளை ஏற்படுத்துகிறாா்கள்.

சிவகளையில் அகழாய்வுப் பணிக்காக தமிழக அரசால் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டு பணி நடைபெற்று வருகிறது. தாமிரவருணி ஆற்றை தூய்மைப்படுத்தும் பணி மாவட்ட ஆட்சியா்கள் மூலம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. அப்பணி தொடா்ந்து நடைபெறும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com