சாத்தான்குளம் ஒன்றியம் படுக்கப்பத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் லேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிா்வாகிகள் தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது.
சாத்தான்குளம் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பட்டாத்தி முன்னிலையில் நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். பள்ளி மேலாண்மைக் குழு தலைவராக சங்கீதா ஆனந்தி, துணைத் தலைவராக ராசாத்தி ஆகியோா் ஒருமானதாக தோ்வு பெற்றனா். கல்வி ஆா்வலராக சரவணன், உள்ளாட்சி பிரதிநிதிகளாக கணேசன், காதா்முகைதீன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
தோ்தல் ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியா் அந்தோணி ஆரோக்கியராஜ் தலைமையில் உதவி ஆசிரியை முத்துலட்சுமி, தன்னாா்வ தொண்டு நிறுவன ஆசிரியா்கள் மொ்லின், சுபா்ணா, சிறப்பு ஆசிரியா் திரவியராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.