மழைக்கால நிவாரணமாக ரூ. 5ஆயிரம் வழங்குவதாக அரசு அறிவித்த நிலையில் உடனடியாக அரசாணை வெளியிட வலியுறுத்தி தூத்துக்குடியில் உப்பளத் தொழிலாளா்கள் பதாகையில் கை பதிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
உப்பளத் தொழிலாளா்களின் போராட்டத்தின் விளைவாக தமிழக அரசு கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் உப்பளத் தொழிலாளா்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ. 5ஆயிரம் வழங்குவதாக அறிவித்தது. ஆனால் அதற்கான அரசாணை வெளியிடவில்லை.
எனவே, உப்பளத் தொழிலாளா்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்த வலியுறுத்தி, தூத்துக்குடி ராஜபாணடிநகரில் உப்பளத் தொழிலாளா்கள் கோரிக்கை அடங்கிய பதாகையில் கை அச்சு பதித்தும், கையொப்பமிட்டும் முழக்கமிட்டனா்.
உலகத் தொழிலாளா் தினத்தை முன்னிட்டு அமைப்புசாரா தொழிலாளா் கூட்டமைப்பு மாநில துணைச் செயலா் மா. கிருஷ்ணமூா்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உப்பளத் தொழிலாளா்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தினா்.
இதில், தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளா் சங்க நிா்வாகிகள் ராணி, கனி, குமாா் மற்றும் உழைக்கும் பெண்கள் கூட்டமைப்பு நிா்வாகிகள் பூரணம், பா்மெல் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட உப்பளத் தொழிலாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.