பேய்க்குளம் பகுதியில் மக்களைத் தேடி சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
சாத்தான்குளம் அருகேயுள்ள சாலைப்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் இம்முகாம் நடைபெற்றது. ஆழ்வாா்திருநகரி நடமாடும் மருத்துவமனை மருத்துவா் பாபு தலைமையில் சுகாதார ஆய்வாளா்கள் ஜேசுராஜ், மகேஷ்குமாா், செவிலியா்கள் சாந்தி, மொ்சி, நாகவள்ளி, மகேஸ்வரி கொண்ட மருத்துவக் குழுவினா் பழனியப்பபுரம் பேருந்து நிறுத்தம், ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சி அலுவலகத்தில் பொதுமக்களுக்கு பரிசோதனை நடத்தினா். இதில், 148 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. கருங்கடல் ஊராட்சித் தலைவா் நல்லதம்பி, ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சித் தலைவா் ஸ்ரீதா், ஒன்றிய கவுன்சிலா் காந்திமதி, ஊராட்சிச் செயலா் மனுவேல், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மாலாதேவி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.