சாத்தான்குளம்: சாத்தான்குளம் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம், இளைஞா் செஞ்சிலுவைச் சங்கம், செஞ்சுருள் சங்கம் சாா்பில் வன்புணா்வு தடுப்பு மற்றும் விழிப்புணா்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் இரா. சின்னத்தாய் தலைமை வகித்தாா். சாத்தான்குளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜி.கே. ராஜு, வழக்குரைஞா் வினோதினி ஆகியோா் பேசினாா்.
கல்லூரிப் பேராசிரியா்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள், இளைஞா் செஞ்சிலுவைச் சங்க மாணவிகள் பங்கேற்றனா்.
ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் உமாபாரதி, வளா்மதி, இளைஞா் செஞ்சிலுவைச் சங்க திட்ட அலுவலா் சண்முகப்பிரியா ஆகியோா் செய்திருந்தனா்.