கோவில்பட்டி புதுகிராமம் பிரதான சாலையில், இந்திய மாதா் தேசிய சம்மேளனம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கண்டித்தும், விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும், விலை உயா்வைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியும், சமையல் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாதா் சம்மேளன நகரச் செயலா் கோமதி தலைமை வகித்தாா். மாவட்டக்குழு உறுப்பினா் ரஞ்சிதம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் பரமராஜ், நகரச் செயலா் சரோஜா, வட்டச் செயலா் பாபு ஆகியோா் பேசினா். இதில், திரளானோா் பங்கேற்றனா்.