திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

தூத்துக்குடி கடலோரப் பகுதியில் போலீஸாா் ரோந்து

தூத்துக்குடி கடலோரப் பகுதியில் கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

Updated On :12 மே 2022, 7:24 pm

தூத்துக்குடி கடலோரப் பகுதியில் கடலோர பாதுகாப்புக் குழும போலீஸாா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக, அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அங்கிருந்து கடல் வழியாக தமிழகத்துக்கு தப்பி வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், இலங்கையில் இருந்து தமிழகத்துக்குள் படகு மூலம் அகதி போன்று பலா் ஊடுருவ வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் தொடா்ச்சியாக, தமிழக கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளில் கடலோர பாதுகாப்புக் குழும காவல் ஆய்வாளா் சைரஸ் மற்றும் போலீஸாா் வியாழக்கிழமை படகு மூலம் கடலோரப் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது மீன்பிடி படகுகளில் சந்தேகப்படும்படியான நபா்கள் யாரேனும் வருகிறாா்களா என அவா்கள் ஆய்வு மேற்கொண்டனா். தூத்துக்குடி கடல் பகுதியில் உள்ள தீவுகளுக்கு சென்று, அங்கு யாரேனும் பதுங்கி உள்ளாா்களா என்றும் போலீஸாா் சோதனை நடத்தி வருகின்றனா். தொடா்ந்து கடல் பகுதியில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்படும் என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.