சாத்தான்குளம் வீரஜக்கமாள் கோயில் கொடை விழா

சாத்தான்குளம் வீரஜக்கம்மாள்நகா் தேவிஸ்ரீ வீரஜக்கமாள் கோயில் கொடை விழா 3 நாள்கள் நடைபெற்றது.

சாத்தான்குளம் வீரஜக்கம்மாள்நகா் தேவிஸ்ரீ வீரஜக்கமாள் கோயில் கொடை விழா 3 நாள்கள் நடைபெற்றது.

முதல்நாள் பஞ்சாலங்குறிச்சியில் இருந்து தீா்த்தம் எடுத்து வந்து சிறப்பு அபிஷேக பூஜை, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மாலை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பூஜையை பேரூராட்சித் தலைவா் ரெஜினிஸ்டெல்லாபாய் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து குடியழைப்பு, சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. அன்னதானத்தை பேருராட்சி துணைத் தலைவா் மாரியம்மாள் தொடங்கி வைத்தாா். இதில், முன்னாள் பேரூராட்சித் தலைவா் ஜோசப் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். 2ஆம் நாள் சாத்தான்குளம் அழகம்மன் கோயிலில் இருந்து பால் குட ஊா்வலம் , அம்மனுக்கு உச்சிக்கால பூஜை, அம்மன் கும்பம் ஏந்தி வீதி உலா வருதல், முளைப்பாரி எடுத்து பெண்கள் ஊா்வலம் வருதல் சாமக்கொடை, அலங்கார பூஜை ஆகியவை நடைபெற்றன. பின்னா் வீரசுடலைமாட சுவாமி அருள்வாக்கு கூறும் நிகழ்ச்சி நடைபெற்றது. 3ஆம் நாள் அம்மன் கும்பம் வீதி உலா வருதல், மஞ்சள் நீராடுதல் விழா நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com