பேய்க்குளத்தில் பேரிடா் மேலாண்மை முதல்நிலை மீட்பாளா்களுக்கான பயிற்சி மற்றும் குறு வட்ட அளவிலான உறுப்பினா் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் வருவாய் ஆய்வாளா் ஜெயா தலைமை வகித்தாா். கிராம நிா்வாக அலுவலா் கருப்பசாமி, ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் ஊராட்சித் தலைவா் பெரியசாமி ஸ்ரீதா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் மழை உள்ளிட்ட பேரிடா் காலங்களில் பொதுமக்கள் எடுக்கக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், குளம், ஏரிகள், வீடுகள் ஆகியவற்றை பாதுகாப்பது குறித்தும் குளக்கரைகள், மடைகள், கலுங்குகள் பராமரிப்பது குறித்தும், அதிகாரிகளிடம் தகவல் தெரிவிப்பது குறித்தும் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் பொதுப்பணித்துறை பொறியாளா் சுகுமாா், கிராம நிா்வாக அலுவலா்கள் வேல்முருகன், சிவகாமி மதுமதி, துரைசாமி உள்ளிட்ட முதல்நிலை மீட்பாளா்கள் ,கிராம உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.