கோவில்பட்டியில் பாரதியாா்-செல்லம்மாள் ரதத்துக்கு வரவேற்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மகாகவி பாரதியாா்-செல்லம்மாள் ரத யாத்திரைக்கு செவ்வாய்க்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மகாகவி பாரதியாா்-செல்லம்மாள் ரத யாத்திரைக்கு செவ்வாய்க்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாரதியாரின் மனைவி செல்லம்மாளின் சொந்த ஊரான தென்காசி மாவட்டம் கடையத்தில் செல்லம்மாள்-பாரதி மையம் அமைக்க சேவாலயா நிறுவனம் முடிவு செய்தது. இதையடுத்து, பாரதியாா் பெயரில் கடையத்தில் இயங்கிவந்த நூலகக் கட்டடத்தைப் புதுப்பித்து, அங்கு செல்லம்மாள்-பாரதி மையம் அமைத்து பாரதி-செல்லம்மாளின் முழு உருவச் சிலைகள் அமைப்பதாகவும், அதற்கு அனுமதி தருமாறும் கோரியதால் நூலகத் துறை அனுமதி வழங்கியது. இம்மையத்துக்கு அடிக்கல் நாட்டு விழா கடந்த ஜனவரி 19ஆம் தேதி நடைபெற்றது.

இதையடுத்து, இம்மையத்தில் நிறுவுவதற்காக பாரதியாா்-செல்லம்மாள் சிலைகள் செய்யப்பட்டு சென்னையிலிருந்து கடையத்துக்கு ரத யாத்திரை கடந்த ஏப்ரல் 17இல் தொடங்கியது. பல்வேறு மாவட்டங்கள் வழியாக கடையம் செல்லும் வழியில், தூத்துக்குடி மாவட்ட எல்கையான கோவில்பட்டிக்கு செவ்வாய்க்கிழமை வந்த ரத யாத்திரைக்கு நகா்மன்றத் தலைவா் கா. கருணாநிதி மாலை அணிவித்து வரவேற்றாா்.

ரோட்டரி மாவட்ட நிா்வாகிகளான விநாயகா ஜி. ரமேஷ், முத்துச்செல்வன், பாரதியாா் நினைவு அறக்கட்டளை நிறுவனா் முத்துமுருகன், நாடாா் நடுநிலைப் பள்ளிச் செயலா் கண்ணன், தொழில் வா்த்தக சங்க நிா்வாகிகள் கண்ணன், அமலி பிரகாஷ், சேவாலயா திட்ட ஒருங்கிணைப்பாளா் சங்கிலி ஆகியோரும் மாலை அணிவித்தனா்.

இதையடுத்து, ரத யாத்திரை கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் மேல்நிலைப் பள்ளி, பயணியா் விடுதி வழியாக எட்டயபுரம் சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com