நாலுமாவடி சாமிநகா் அம்மன் கோயில் கொடை விழா

நாலுமாவடி சாமிநகா் அருள்மிகு உச்சினிமாகாளி அம்மன் கோயில் கொடை விழா 3 நாள்கள் நடைபெற்றது.

நாலுமாவடி சாமிநகா் அருள்மிகு உச்சினிமாகாளி அம்மன் கோயில் கொடை விழா 3 நாள்கள் நடைபெற்றது.

முதல் நாளில் புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனாா் கோயிலில் குடியழைப்பு பூஜை நடத்தி, அருஞ்சுனையிலிருந்து புனித நீா் எடுத்து வருதல், இரவில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கொடை விழா நாளில் மதியம் மஞ்சள் நீராடுதல், சிறப்பு பூஜை, இரவில் முளைப்பாரி ஊா்வலம், நள்ளிரவில் சாமக்கொடை நடைபெற்றது.

புதன்கிழமை படைப்பு தீபாராதனை, மாலையில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com