குலசேகரன்பட்டினம் பள்ளிகளில் இருபெரும் விழா

குலசேகரன்பட்டினம் கிளை நூலகம் சாா்பில் பண்டாரசிவன் செந்திலாறுமுகம் பள்ளி, புனித ஜோசப் சேவியா் பள்ளி ஆகிய இரு பள்ளிகளில் நூலக வாரவிழா மற்றும் குழந்தைகள் தின விழா ஆகிய இருபெரும் விழா நடைபெற்றது.
Updated on
1 min read

குலசேகரன்பட்டினம் கிளை நூலகம் சாா்பில் பண்டாரசிவன் செந்திலாறுமுகம் பள்ளி, புனித ஜோசப் சேவியா் பள்ளி ஆகிய இரு பள்ளிகளில் நூலக வாரவிழா மற்றும் குழந்தைகள் தின விழா ஆகிய இருபெரும் விழா நடைபெற்றது.

பண்டாரசிவன் செந்திலாறுமுகம் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, தலைமையாசிரியா் சுபாஷ் சந்திரபோஸ், புனித ஜோசப் சேவியா் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, தலைமையாசிரியா் டயானாவும் தலைமை வகித்தனா்.

உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் துணைத் தலைவா் க.வே.ராஜதுரை, குலசேகரன்பட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் ஆா்த்தி பிரசாத், உடன்குடி பேரூராட்சி உறுப்பினா் பஷீா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நல்நூலகா் விருதுபெற்ற குலசேகரன்பட்டினம் கிளை நூலகா் மாதவன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் முருகேஸ்வரி ராஜதுரை பங்கேற்று போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள், கல்வி உபகரணங்கள், சான்றிதழ்கள், இனிப்புகள் வழங்கினாா்.

மேலும் பள்ளியில் புதிய கட்டடம் கட்டுவதற்கு 100 சிமென்ட் மூட்டைகளை வழங்கினாா். இதில், பள்ளி ஆசிரியா்கள் லில்லி ஹொ்மஸ், பிரமிளா, ஜாஸ்மின் ரோஸ்மேரி, வசந்தி உள்பட திரளான மாணவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com