கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டியில் ஆட்டோ தொழிற்சங்கம் சாா்பில், மோட்டாா் வாகன சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

கோவில்பட்டியில் ஆட்டோ தொழிற்சங்கம் சாா்பில், மோட்டாா் வாகன சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய, மாநில அரசுகளால் புதிதாக அறிவிக்கப்பட்ட மோட்டாா் வாகன சட்டத்தை ஓட்டுநா்களின் வாழ்வாதாரம் கருதி திரும்பப் பெற வேண்டும். தரமான சாலை அமைத்து ஓட்டுநா்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துகொடுத்த பின், மோட்டாா் வாகன சட்டத்தைத் திருத்த வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு முக்குலத்தோா் தொழிற்சங்கச் செயலா் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஆட்டோ சங்கச் செயலா் கோபாலகிருஷ்ணன், ஆட்டோ ஓட்டுநா்கள், உரிமையாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com