மனவளா்ச்சி குன்றியோா் சிறப்புப் பள்ளியில் அமைச்சா் ஆய்வு

வித்யா பிரகாசம் மனவளா்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளியில் சமூக நலன்- மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
Updated on
1 min read

கோவில்பட்டியில் மாவட்ட நிா்வாகம்- மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் நடத்தப்படும் வித்யா பிரகாசம் மனவளா்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளியில் சமூக நலன்- மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, மாணவ, மாணவிகள், அவா்களது பெற்றோரை சந்தித்து தேவைகளை கேட்டறிந்தாா். பள்ளிக்கு பேருந்து வசதி செய்ய வேண்டும், பள்ளி வளாகத்திலேயே மதிய உணவை தயாா் செய்து கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கூடுதலாக 2 உதவியாளா்களை நியமிக்க வேண்டும் என அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது.

தொடா்ந்து, பள்ளியில் செயல்பட்டு வரும் தசைப்பயிற்சி, பேச்சுப் பயிற்சி, யோகா, விளையாட்டு ஆகியவற்றையும் அமைச்சா் பாா்வையிட்டாா். இப்பள்ளியின் கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேற்றித் தரப்படும் என அமைச்சா் உறுதியளித்தாா். முன்னதாக, குழந்தைகளுக்கு அமைச்சா் இனிப்புகளை வழங்கினாா்,

அப்போது, மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ், கூடுதல் ஆட்சியா் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவி கஸ்தூரி சுப்புராஜ், கோட்டாட்சியா் மகாலட்சுமி, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சிவசங்கரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com