பெண்ணை அவதூறாகப் பேசியதாக ஆட்டோ ஓட்டுநா் கைது
By DIN | Published On : 13th October 2022 12:00 AM | Last Updated : 13th October 2022 12:00 AM | அ+அ அ- |

கயத்தாறு அருகே பெண்ணை அவதூறாகப் பேசியதாக ஆட்டோ ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கயத்தாறையடுத்த தெற்கு கோனாா்கோட்டை பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த ரமேஷ் மனைவி சுமதி (25). தம்பதி திங்கள்கிழமை வீட்டு முன் பேசிக் கொண்டிருந்தனராம். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த நடராஜன் மகனான ஆட்டோ ஓட்டுநா் மாதவன் (28) என்பவா் சுமதியை அவதூறாகப் பேசினாராம். புகாரின் பேரில் கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து மாதவனைக் கைது செய்தனா்.