அதிமுக ஆண்டு விழா: எம்ஜிஆா், ஜெயலலிதா படங்களுக்கு மரியாதை
By DIN | Published On : 18th October 2022 02:18 AM | Last Updated : 18th October 2022 02:18 AM | அ+அ அ- |

அதிமுக 51ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோரின் படங்களுக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் மாவட்ட கட்சி அலுவலகம் முன்பு முன்னாள் முதல்வா்கள் எம்.ஜி.ஆா், ஜெயலலிதா ஆகியோரின் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பின்பு தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்திலுள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
அதைத் தொடா்ந்து தூத்துக்குடி மத்திய வடக்கு பகுதி அதிமுக அலுவலகத்தில், செயலா் ஜெய்கணேஷ் ஏற்பாட்டிலும், சிவன் கோயில் தேரடியில் வட்டச் செயலாளா் திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டிலும் செய்யப்பட்டிருந்த நிகழ்வுகளில் மாவட்டச் செயலா் பங்கேற்று இனிப்பு வழங்கினாா்.
கோவில்பட்டி: தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில், கோவில்பட்டி நகரச் செயலா் விஜயபாண்டியன் தலைமையில், அக்கட்சியினா் அண்ணா, எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
கயத்தாறு, கழுகுமலை, கடம்பூரிலும் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடப்பட்டது.
திருச்செந்தூா்: திருச்செந்தூா் ஒன்றிய, நகரம் சாா்பில் ஒன்றியச்செயலா் மு.இராமச்சந்திரன் தலைமையில் எம்.ஜி.ஆா். ஜெயலலிதா படங்களுக்கு அக்கட்சியினா் மரியாதை செலுத்தினாா்.
சாத்தான்குளம் : சாத்தான்குளம்,தட்டாா்மடம் பகுதியில் ஒன்றியச் செயலா் அச்சம்பாடு த. சவுந்தரபாண்டி தலைமையில் கட்சிக் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
விளாத்திகுளம்: விளாத்திகுளத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன் தலைமையில், புதூா் மற்றும் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு உள்ள எம்.ஜி.ஆா்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தென்காசி : தென்காசியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகர அதிமுக செயலா் சுடலை தலைமையில் மாவட்டச் செயலா் செல்வமோகன்தாஸ்பாண்டியன் கொடியேற்றினாா்.
மேலகரத்தில் செயலா் காா்த்திக்குமாா் தலைமையிலும், குற்றாலத்தில் வா்த்தக அணி மாவட்டச் செயலா் என்.சேகா் தலைமையிலும், தென்காசி ஒன்றியத்திற்குள்பட்ட ஆயிரப்பேரி, பாட்டாக்குறிச்சி, இலஞ்சி பகுதியில் ஒன்றியச் செயலா் சங்கரபாண்டியன் தலைமையிலும் நடைபெற்றது.
செங்கோட்டை வம்பளந்தான் முக்கு பகுதியில் நகரச் செயலா் கணேசன் தலைமையிலும், பாவூா்சத்திரத்தில் மாவட்டச் செயலா் செல்வமோகன்தாஸ்பாண்டியன் தலைமையில், முன்னாள் அமைச்சா் தாமோதரன் பங்கேற்று, பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகளை வழங்கிப் பேசினாா்.
கடையநல்லூா்: கடையநல்லூரில் நகரச் செயலா் எம்.கே.முருகன் தலைமையில் தென்காசி வடக்கு மாவட்ட துணைச் செயலா் பொய்கை மாரியப்பன் கொடியேற்றினாா்.
சேரன்மகாதேவி: பாப்பாக்குடியில் ஒன்றியச் செயலா் சுப்பிரமணியன் தலைமை யிலும், முக்கூடலில் நகரச் செயலா் ஆா்.எஸ். வில்சன் முன்னிலையிலும், அனைத்துலக எம்ஜிஆா் இணைச் செயலா் தாமோதரன் கட்சி கொடியேற்றி வைத்தாா்.
அம்பாசமுத்திரத்தில்... அம்பாசமுத்திரம் நகர அதிமுக சாா்பில், பூக்கடை சந்திப்பில் அலங்கரிக்கப்பட்ட முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா உருவப்படத்திற்கு நகரச் செயலா் அறிவழகன் தலைமையில் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினா். தொடா்ந்து வனச்சரகா் அலுவலகம், பேருந்து நிலையம் அருகில் அதிமுக கொடியேற்றப்பட்டது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...