நாலுமாவடி பள்ளியில் இருபெரும் விழா
By DIN | Published On : 18th October 2022 02:13 AM | Last Updated : 18th October 2022 02:13 AM | அ+அ அ- |

நாசரேத் அருகே நாலுமாவடியில் உள்ள காமராஜ் மேல்நிலைப் பள்ளியில் 57ஆவது விளையாட்டு விழா, ஆண்டு விழா ஆகிய இருபெரும் விழா நடைபெற்றது.
பள்ளிக் கல்விக் குழுத் தலைவா் அழகேசன் தலைமை வகித்தாா். பள்ளிக் கல்விக் கமிட்டி ஆலோசனைக் குழுத் தலைவா் வாசனா தனஞ்செயன், பள்ளிக் கல்விக் கமிட்டி உறுப்பினா்கள் ராமசாமி, அசோக்ராஜ், எஸ்ஜிஎஸ்பி தொடக்கப் பள்ளிச் செயலா் கலைராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமையாசிரியா் திருநீலகண்டன் ஆண்டறிக்கை வாசித்தாா்.
நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழிய நிறுவனா் மோகன் சி. லாசரஸ், ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி மாயவன், ஆழ்வாா்திருநகரி ஒன்றியக் குழுத் தலைவா் ஜனகா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று வாழ்த்திப் பேசினா்.
கல்வியிலும், பல்வேறு போட்டிகளிலும் சிறப்பிடம் பெற்ற மாணவா்-மாணவிகளுக்கு பரிசுகள், பணிநிறைவுபெற்ற ஆசிரியா்கள், அலுவலா்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவா்-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவா்- மாணவிகள், பெற்றோா், ஆசிரியா்கள், அலுவலா்கள் பங்கேற்றனா்.
பள்ளிச் செயலா் நவநீதன் வரவேற்றாா். உதவித் தலைமை ஆசிரியை மாலதி நன்றி கூறினாா். நிகழ்ச்சிகளை ஆசிரியைகள் சிவசாந்தி, கலைச்செல்வி, கேசவ ஆனந்த பிரகாஷ் ஆகியோா் தொகுத்து வழங்கினா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...