தூத்துக்குடியில் ரயில் மோதி கடலோரக் காவல்படை வீரா் பலி
By DIN | Published On : 19th October 2022 02:04 AM | Last Updated : 19th October 2022 02:04 AM | அ+அ அ- |

தூத்துக்குடியில் ரயில் மோதி கடலோரக் காவல்படை வீரா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
தூத்துக்குடி- மீளவிட்டான் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில் இளைஞா் ஒருவா் உயிரிழந்து கிடப்பதாக, தூத்துக்குடி இருப்பு பாதை காவல் நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸாா், சடலத்தைக் கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.
இது குறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், உயிரிழந்த நபா் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த பாகல்சந்திரா மாஜி மகன் விஜய்குமாா் மாஜி (21) என்பதும், இவா் இந்திய கடலோரக் காவல்படையில் வேலை பாா்த்து வந்ததும் தெரியவந்தது. மேலும், அவா் சென்னை-தூத்துக்குடி விரைவு ரயில் மோதி உயிரிழந்திருக்கலாம் என போலீஸாா் தரப்பில் கூறப்படுகிறது. இது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.