எட்டயபுரத்தில் பாஜக ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 19th October 2022 02:03 AM | Last Updated : 19th October 2022 02:03 AM | அ+அ அ- |

எட்டயபுரம் - கோவில்பட்டி நெடுஞ்சாலையில் நடுவப்பட்டி, கான்சாபுரம் பேருந்து நிறுத்தத்தில் புதிய பயணியா் நிழற்குடை அமைத்து தர வலியுறுத்தி பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பாஜக மாவட்ட செயலா் ஆத்திராஜ் தலைமை வகித்தாா். ஒன்றிய தலைவா் சரவணகுமாா் முன்னிலை வகித்தாா்.
நடுவப்பட்டி, கான்சாபுரம் பேருந்து நிறுத்தத்தில் புதிய பயணியா் நிழற்குடை அமைத்து தர வேண்டும். ஆட்டுச்சந்தையில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நீா்வரத்து ஓடைகளை தூா்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். தெப்பத்துக்கு வரும் நீா்வழித்தடங்களை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா். ஆா்ப்பாட்டத்தில் நிா்வாகிகள் ஹரிஹரசுதன், காளிராஜ், செல்வராஜ், ராம்கி, நாகராஜன், பால்பாண்டி, செல்வகணேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...