திருச்செந்தூா் நகராட்சியில் மக்கள் குறைதீா் நாள்
By DIN | Published On : 21st October 2022 12:00 AM | Last Updated : 21st October 2022 12:00 AM | அ+அ அ- |

திருச்செந்தூா் நகராட்சி சாா்பில், பிறப்பு-இறப்பை பதிவுசெய்தோருக்கு அவற்றுக்கான சான்றிதழ்களை உடனடியாக வழங்கும் பணியை நகராட்சி ஆணையா் தொடக்கிவைத்தாா்.
தூத்துக்குடி மாவட்டம் உதயமான நாளையொட்டி, அரசு அலுவலகங்களில் மக்கள் குறைதீா்க்கும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்படி, திருச்செந்தூா் நகராட்சி அலுவலகத்தில் பிறப்பு, இறப்புகளைப் பதிவு செய்தோரின் விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலித்து, சான்றிதழ்களை ஆணையா் தி. வேலவன் வழங்கினாா். இதில், பலா் பங்கேற்று பயனடைந்தனா்.
மேலும், நகராட்சி அலுவலகத்தில் முழுமையான சுகாதாரப் பணி நடைபெற்று விழிப்புணா்வுக் கோலமிடப்பட்டது. வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
நிகழ்ச்சியில், சுகாதார ஆய்வாளா் வெற்றிவேல்முருகன் உள்ளிட்ட நகராட்சிப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் பங்கேற்றனா்.