திருச்செந்தூா் பள்ளியில் தூய்மைப் பணி
By DIN | Published On : 21st October 2022 12:05 AM | Last Updated : 21st October 2022 12:05 AM | அ+அ அ- |

திருச்செந்தூா் செந்தில்முருகன் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தூத்துக்குடி மாவட்டம் உதயமான நாளை முன்னிட்டு தூய்மைப் பணி, மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளி வகுப்பறைகள், வளாகம் தூய்மைப்படுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமையாசிரியா் மாரியம்மாள் தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக் குழு துணைத் தலைவா் கவிதா மரக்கன்றுகளை நட்டாா். ஆசிரியா்கள், அலுவலா்கள், மாணவிகள், மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா். உதவித் தலைமையாசிரியா் க. சங்கரி நன்றி கூறினாா்.