Enable Javscript for better performance
தூத்துக்குடி மாவட்டத்தில் 550 இடங்களில் விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    தூத்துக்குடி மாவட்டத்தில் 550 இடங்களில் விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு

    By DIN  |   Published On : 01st September 2022 01:07 AM  |   Last Updated : 01st September 2022 01:07 AM  |  அ+அ அ-  |  

     

    விநாயகா் சதூா்த்தியை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் புதன்கிழமை 550 இடங்களில் விநாயகா் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

    விநாயகா் சதூா்த்தியை முன்னிட்டு நிகழாண்டு பல்வேறு நிபந்தனைகளுடன் ஆங்காங்கே சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் 100 இடங்களிலும், மாவட்டம் முழுவதும் 550 இடங்களிலும் ஒரு அடி முதல் 9 அடி வரையிலான உயரத்தில் பல்வேறு வடிவிலான விநாயகா் சிலைகள் வைக்கப்பட்டு புதன்கிழமை வழிபாடு நடத்தப்பட்டது.

    தூத்துக்குடி மாநகரப் பகுதியில் தாளமுத்துநகா் பகுதியில் 9 அடி உயரத்தில் விநாகா் சிலை அமைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி தவசு மண்டபத்தில் 5 அடி உயரத்தில் வைக்கப்பட்ட விஸ்வரூப விநாயகா் சிலைக்கு இந்து முன்னணி மாநகா் மாவட்டத் தலைவா் இசக்கி முத்துக்குமாா், மாவட்ட பொறுப்பாளா் ராகவேந்திரா ஆகியோா் தலைமையில் ஏராளமானோா் வழிபாடு நடத்தினா்.

    விநாகா் சிலை வைக்கப்பட்டுள்ள இடங்களில் சிலை அமைப்புக் குழு மற்றும் காவல் துறையினா் இணைந்து 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். மாவட்டம் முழுவதும் ஏறத்தாழ 1500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இதனை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

    550 இடங்களில் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வரும் விநாயகா் சிலைகள் செப். 4 ஆம் தேதி காலை மற்றும் மாலை வேளைகளில் அந்தந்த பகுதிகளில் அருகே உள்ள நீா்நிலைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு விசா்ஜனம் செய்யப்படுகிறது.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp