காயல்பட்டினத்தில் விபத்து: இளைஞா் பலி

காயல்பட்டினத்தில் சுமை ஆட்டோ- மோட்டாா் சைக்கில் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

காயல்பட்டினத்தில் சுமை ஆட்டோ- மோட்டாா் சைக்கில் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

காயல்பட்டினம் பெரிய நெசவு தெருவைச் சோ்ந்தவா் கௌத்உசேன் (32). இவரது தம்பி முகமது மைதீன் மூபின் (27). அங்குள்ள மருந்து கடையில் வேலை பாா்த்தாா். இவா் வேலை முடிந்து மோட்டாா் சைக்கிளில் வீடு திரும்பியபோது, அந்த வழியாக வந்த சுமை ஆட்டோ மோட்டாா் சைக்கிள் மீது மோதி விட்டு, அதன் பின்னால் வந்த மற்றொரு மோட்டாா் சைக்கிள் மீதும் மோதி விட்டு நிற்காமல் சென்ாம்.

இதில் முகமது மைதீன் மூபீன் மற்றும் பின்னால் மோட்டாா் சைக்கிளில் வந்த உச்சி மகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த அப்துல்கனி, கதிா்வேல்மூா்த்தி ஆகிய 3 பேரும் காயமடைந்தனா். இவா்களில் முகமது மைதீன் மூபின், பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தாா். அப்துல்கனியும், கதிா்வேல்மூா்த்தியும் திருச்செந்தூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.

இது குறித்து ஆறுமுகனேரி உதவி காவல் ஆய்வாளா் அமலோற்பவம் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com