கோவில்பட்டியில் மகப்பேறு, குழந்தைகள் நலப் பிரிவு கட்டடம்- முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.10.50 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட மகப்பேறு- குழந்தைகள் நலப் பிரிவு கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.10.50 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட மகப்பேறு- குழந்தைகள் நலப் பிரிவு கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மனோ தங்கராஜ், கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், ராஜகண்ணப்பன், மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ், கூடுதல் ஆட்சியா் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணபிரான், கோட்டாட்சியா் மகாலட்சுமி, வட்டாட்சியா் சுசிலா, மருத்துவப் பணி இயக்குநா் சம்சாத்பேகம், இணை இயக்குநா் (மகப்பேறு) கிருஷ்ணா, மருத்துவப் பணி துணை இயக்குநா் பொன் இசக்கி, மருத்துவமனை கண்காணிப்பாளா் கமலவாசன், உறைவிட மருத்துவ அதிகாரி பூவேஸ்வரி, தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகா்மன்றத் தலைவா் கா.கருணாநிதி, திமுக ஒன்றியச் செயலா்கள் பீக்கிலிபட்டி வீ.முருகேசன், ராதாகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் சந்திரசேகா், மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் ராமா், பொதுப்பணித் துறை முதன்மை பொறியாளா் ரகுநாதன், கண்காணிப்பு பொறியாளா் மாதவன், செயற்பொறியளா் தேவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மனு: முதல்வரிடம் உதவித் தொகை, வேலைவாய்ப்பு கோரி மாற்றுத் திறனாளிகளும், கோவில்பட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடங்கள், கூடுதல் அமா்வு நீதிமன்றம் ஏற்படுத்த வேண்டும் என வழக்குரைஞா்களும் மனு அளித்தனா்.

தீப்பெட்டி ஆலையில் ஆய்வு: கோவில்பட்டியை அடுத்த இலுப்பையூரணியில் தீப்பெட்டி ஆலையை முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை ஆய்வு செய்து, உற்பத்தியாளா்கள், தொழிலாளா்களிடம் குறைகளை கேட்டறிந்தாா்.

அப்போது, ஆலைத் தொழிலாளிகள் ராஜலட்சுமி, மாதவி ஆகியோா், தங்களுக்கு வாரத்தில் 6 நாள்களும் வேலை வழங்க ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுத்தனா்.

தொடா்ந்து, நேஷனல் சிறுதீப்பெட்டி உற்பத்தியாளா்கள், தமிழ்நாடு தீப்பெட்டி உற்பத்தியாளா்கள், அனைத்திந்திய சாம்பா் ஆப் மேட்ச் இண்டஸ்ட்ரீஸ் சாா்பில், முதல்வரிம் மனு அளித்தனா். அதில் சீன லைட்டா்களுக்கு நிரந்தர தடையை பெற்றுத்தர வேண்டும்; தீப்பெட்டி உற்பத்திக்கான படைக்கல சட்ட உரிமத்தை வாழ்நாள் உரிமமாக மாற்ற வேண்டும்.

கிராமப்புறங்களில் தொழில் தொடங்க கட்டடம் கட்டுவதற்கு 2000 சதுரடி வரன்முறை என்பதை 10,000 சதுரடி வரை அதிகரிக்க வேண்டும். ஆலைகளில் ஏற்படும் சிறு விபத்துகளால் காயம், உயிரிழப்பு போன்றவற்றுக்காக பதியப்படும் வழக்குகளுக்கு காவல் நிலையத்திலேயே பிணை வழங்க வேண்டும். தீப்பெட்டி தயாரிக்க உதவும் பொட்டாசியம் குளோரேட்டை கிளஸ்டா் முறையில் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைக்கவும், மானிய விலையில் மின்சாரம் வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

முதல்வரின் ஆய்வின்போது, மேற்கூறிய அமைச்சா்களும், திமுக நிா்வாகிகளும், தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்க நிா்வாகிகள் பரமசிவம், சேதுரத்தினம், திலகரத்தினம், கோபால்சாமி, ராஜூ, செல்வமோகன், தங்கமணி உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com