தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் சுகாதாரம், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
திருநெல்வேலி, கோவில்பட்டியில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக அமைச்சா் மா. சுப்பிரமணியன் கோவில்பட்டிக்கு வந்திருந்தாா். அவா் வியாழக்கிழமை காலை கோவில்பட்டி அருகே திட்டங்குளம் பகுதியிலிருந்து 15 கி.மீ. தொலைவுக்கு நடைப்பயிற்சி மேற்கொண்டாா்.
அப்போது எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் திடீரென ஆய்வு மேற்கொண்டு, மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதிகள், மேற்கொள்ளப்பட வேண்டிய வளா்ச்சிப் பணிகள் குறித்துக் கேட்டறிந்தாா்.
இதில், எக்ஸ்ரே பிரிவு, ஆய்வகம், மருந்தகம் உள்ளிட்ட பிரிவுகளில் பணியாளா்கள் பற்றாக்குறை இருப்பது தெரியவந்தது. காலிப்பணியிடங்களை நிரப்ப விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என, மருத்துவமனை வருகைப் பதிவேட்டில் அவா் பதிவிட்டாா்.
திமுக ஒன்றியச் செயலா் ராதாகிருஷ்ணன், பேரூா் செயலா் பாரதி கணேசன், எட்டயபுரம் பேரூராட்சித் தலைவா் ராமலட்சுமி சங்கரநாராயணன், கோவில்பட்டி நகா்மன்றத் தலைவா் கா. கருணாநிநி, மருத்துவா் சவுந்தரராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தாா்.