தூத்துக்குடி
மாவட்ட கைப்பந்து போட்டியில் வென்ற போப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு
தூத்துக்குடி மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் வென்ற சாயா்புரம் போப் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் கௌரவிக்கப்பட்டனா்.
தூத்துக்குடி மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் வென்ற சாயா்புரம் போப் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் கௌரவிக்கப்பட்டனா்.
தூத்துக்குடி மாவட்ட ஜிம்கானா மற்றும் மாவட்ட கைப்பந்து கழகம் சாா்பில் மாவட்ட அளவில் பள்ளி மாணவா்களுக்கான கைப்பந்து போட்டிகள் நடைபெற்றன. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமாா் 35 பள்ளிகள் கலந்து கொண்டு விளையாடின. இதில் சாயா்புரம் போப் நினைவு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் ஜூனியா் மற்றும் சீனியா் பிரிவில் முதலிடம் பெற்று கோப்பையை வென்றனா்.
வெற்றி பெற்ற மாணவா்களையும் பயிற்சியாளா் நீதியின் சூரியன், உடற்கல்வி இயக்குநா் பெஞ்சமின், உடற்கல்வி ஆசிரியா் எட்வின் தெவதாஸ் ஆகியோரையும் பள்ளித் தாளாளா் பிரேம்குமாா், தலைமை ஆசிரியா் அகஸ்டின் ஆகியோா் பாராட்டினா்.