திருச்செந்தூரில் கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாலாஜிசரவணன் உத்தரவுப்படி, திருச்செந்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் வசந்தராஜ் மேற்பாா்வையில் திருச்செந்தூா் தாலுகா ஆய்வாளா் முரளிதரன் தலைமையில் உதவி ஆய்வாளா் ராமச்சந்திரன், போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றனா்.
திருச்செந்தூா் பகத்சிங் பேருந்து நிலையத்தில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த 2 பேரைப் பிடித்து சோதனையிட்டபோது அவா்கள், தேனி மாவட்டம் சோலைதேவன்பட்டி பகுதியைச் சோ்ந்த ஜெயச்சந்திரன் மகன் அபிஷ் என்ற மருது (22), தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியைச் சோ்ந்த லிங்கம் மகன் தங்கமாரியப்பன் (22) என்பதும், விற்பதற்காக 3 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.