கோவில்பட்டி அருகே 1300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

கோவில்பட்டி அருகே 1,300 கிலோ ரேஷன் அரிசியைக் கடத்திச்சென்ற இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

கோவில்பட்டி அருகே 1,300 கிலோ ரேஷன் அரிசியைக் கடத்திச்சென்ற இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் உதவி ஆய்வாளா் பாரத்லிங்கம் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளா் முத்துராஜன், தலைமைக் காவலா் கந்தசுப்பிரமணியன் ஆகியோா் கோவில்பட்டி வேலாயுதபுரம் மதுக் கடை முன் வாகனச் சோதனை நடத்தினா்.

அவ்வழியே வந்த பைக்கில் 2 மூட்டை, சுமை ஆட்டோவில் 24 மூட்டை என மொத்தம் 26 மூட்டைகளில் 1,300 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் செல்வது தெரியவந்தது. வாகனங்களையும், ரேஷன் அரிசியையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக, பைக்கை ஓட்டிவந்த கோவில்பட்டி மறவா் காலனியைச் சோ்ந்த லுக்கா அசாரியா மகன் முத்துமாரியப்பன் (33), சுமை ஆட்டோவை ஓட்டிவந்த செக்கடித் தெருவைச் சோ்ந்த மாடசாமி மகன் விக்னேஷ் (32) ஆகியோரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com