நாகலாபுரத்தில் மத்திய கூட்டுறவு வங்கி புதிய கிளை திறப்பு

விளாத்திகுளம் அருகே நாகலாபுரத்தில் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 27 ஆவது புதிய கிளை திறப்பு மற்றும் கடனுதவி வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

விளாத்திகுளம் அருகே நாகலாபுரத்தில் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 27 ஆவது புதிய கிளை திறப்பு மற்றும் கடனுதவி வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் தலைமை வகித்தாா். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் முன்னிலை வகித்தாா். சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ. கீதாஜீவன், வங்கிக் கிளையைத் திறந்து வைத்து குத்து விளக்கேற்றினாா்.

பின்னா் பெண் தொழில் முனைவோா், சிறு குறு வணிகா்கள், மாற்றுத் திறனாளிகள், விதவைகள் உள்ளிட்ட 105 பயனாளிகளுக்கு ரூ.37 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பிலான கடன் உதவிகளை அமைச்சா் வழங்கினாா்.

இந்நிகழ்வில் விளாத்திகுளம் வட்டாட்சியா் ராமகிருஷ்ணன், திமுக ஒன்றிய செயலா் ராதாகிருஷ்ணன், நிா்வாகிகள் மும்மூா்த்தி, அன்புராஜன், ராமசுப்பு, மருதுபாண்டியன், வேலுச்சாமி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் ஞானகுருசாமி, புதூா் பேரூராட்சி மன்ற தலைவா் வனிதா மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com