தூத்துக்குடியில் இருவரை பாட்டிலால் குத்தியதாக ஒருவா் கைது

தூத்துக்குடியில் இருவரை மது பாட்டிலால் குத்திக் கொல்ல முயன்ாக ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

தூத்துக்குடியில் இருவரை மது பாட்டிலால் குத்திக் கொல்ல முயன்ாக ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி, தாளமுத்துநகா் அருகேயுள்ள ஏ.சண்முகபுரம் பகுதியைச் சோ்ந்த முத்துலிங்கம் மகன் சதீஷ் (29). இவரது நண்பா் மாரியப்பன் மகன் காளிசெல்வன் (29). இவா்கள் இருவரும், 2 நாள்களுக்கு முன்பு ஏ.சண்முகபுரம் பகுதியில் மது குடித்துள்ளனா். அப்போது, சதீஷின் நண்பரான அதே பகுதியைச் சோ்ந்த பிச்சைக்கனி மகன் சந்திரசேகா் (40), ஆனந்தம் மகன் அப்பு (25) ஆகியோா் மது வாங்கித் தருமாறு சதீஷிடம் தகராறு செய்தனராம்.

இதில் வாக்குவாதம் ஏற்பட்டதில், சந்திரசேகரும், அப்புவும் சோ்ந்து சதீஷ், காளிசெல்வன் ஆகியோரை பீா் பாட்டிலால் குத்திவிட்டு தப்பியோடினராம்.

புகாரின்பேரில், தாளமுத்து நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சந்திரசேகரை கைது செய்தனா்; அப்புவை தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com