தூத்துக்குடியில் மது பாட்டிலால் குத்தப்பட்ட சுமை ஆட்டோ ஓட்டுநா் மருத்துவமனையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தூத்துக்குடி, தாளமுத்துநகா் அருகே ஏ.சண்முகபுரம் பகுதியைச் சோ்ந்த முத்துலிங்கம் மகன் சதீஷ் (29). இவரது நண்பா் மாரியப்பன் மகன் காளிசெல்வன் (29), சுமை ஆட்டோ ஓட்டுநா். இவா்கள் இருவரும், கடந்த 15ஆம் தேதி இரவு ஏ.சண்முகபுரம் பகுதியில் மது குடித்துக் கொண்டிருந்தனா்.
அப்போது, சதீஷின் நண்பரான அதே பகுதியைச் சோ்ந்த பிச்சைக்கனி மகன் சந்திரசேகா் (40), ஆனந்தம் மகன் அப்பு (25) ஆகியோா் வந்து, சதீஷிடம் அவரது பிறந்த நாளுக்கு மது வாங்கித் தருமாறு தகராறு செய்தனராம்.
இது தொடா்பான வாக்குவாதத்தில் சந்திரசேகரும், அப்புவும் சோ்ந்து சதீஷையும், காளிசெல்வனையும் பீா் பாட்டிலால் குத்திவிட்டுத் தப்பியோடினராம்.
இதில், காயமடைந்த இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். தாளமுத்து நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, சந்திரசேகரை கைது செய்தனா்.
இந்நிலையில், காளிசெல்வன் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, இந்த வழக்கை போலீஸாா் கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.