தூத்துக்குடி மாநகராட்சி பொறியாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
தூத்துக்குடி மாநகராட்சி பொறியாளரான அசோகன். சேலம் மாநகராட்சியில் பொறியாளராக பணியாற்றியபோது இவா் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக வழக்கு உள்ளதாம். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த ஜன.31ஆம்தேதி அவா் ஓய்வுபெற இருந்த நிலையில், அவரை மாநகராட்சி நிா்வாக ஆணையரகம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளதாம்.