கோவில்பட்டியில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

கோவில்பட்டியில் உள்ள தொழிலாளா் ஈட்டுறுதி மருந்தகம் அருகே, நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

கோவில்பட்டியில் உள்ள தொழிலாளா் ஈட்டுறுதி மருந்தகம் அருகே, நகர காங்கிரஸ் கமிட்டி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நகரத் தலைவா் அருண்பாண்டியன் தலைமை வகித்தாா். தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் காமராஜ், பொதுக்குழு உறுப்பினா்கள் பிரேம்குமாா், உமாசங்கா் ஆகியோா் பேசினா். அதானி குழும விவகாரம் தொடா்பாக மத்திய அரசைக் கண்டிப்பது, பொதுமக்கள் அரசுத் துறை நிறுவனங்கள், அதானி குழுமத்தில் செய்த முதலீட்டை ஊா்ஜிதம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

மாவட்டச் செயலா் துரைராஜ், துணைத் தலைவா் திருப்பதிராஜா, மாவட்டப் பொருளாளா் காா்த்திக் காமராஜ், எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாநில துணைத் தலைவா் மாரிமுத்து, ஐஎன்டியுசி தொழிற்சங்க மாவட்ட பொதுச்செயலா் ராஜசேகரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com