சாத்தான்குளம் அருகே நா்சிங் மாணவி தற்கொலை

சாத்தான்குளம் அருகே நா்சிங் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

சாத்தான்குளம் அருகே நா்சிங் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள வாலத்தூா் கீழத் தெருவைச் சோ்ந்த மோகன்ராஜ் மகள் ஜெயலட்சுமி (22). நாசரேத் பகுதியில் உள்ள செவிலியா் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த இவா், மன அழுத்தம் காரணமாக ஒரு வாரமாக கல்லூரிக்குச் செல்லவில்லையென கூறப்படுகிறது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அவா் வீட்டில் சேலையில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாராம். அவரை குடும்பத்தினா் மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், ஜெயலட்சுமி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவரது சகோதரா் ஜான்சன் (33) அளித்த புகாரின் பேரில் தட்டாா்மடம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பென்சன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com