நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தூய்மை இந்தியா திட்ட விழிப்புணா்வு பேரணி

கோவில்பட்டியில் ஜேசிஐ சாா்பில் தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :26 ஜனவரி 2023, 6:50 pm

கோவில்பட்டியில் ஜேசிஐ சாா்பில் தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

இப் பேரணிக்கு ஜேசிஐ தலைவா் தீபன்ராஜ் தலைமை வகித்தாா். செயலா் சூா்யா, முன்னாள் தலைவா்கள் அருண், முரளிகிருஷ்ணன், லட்சுமிவிக்னேஷ், பாரதியாா் நினைவு அறக்கட்டளை தலைவா் முத்துமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் சுஜித் ஆனந்த் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். அரசு அலுவலக வளாகத்தில் உள்ள காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகம் முன்பிருந்து தொடங்கிய இப்பேரணி எட்டயபுரம் சாலை வழியாக மீண்டும் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

நாடாா் மேல்நிலைப் பள்ளி, வ.உ.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, இலக்குமி ஆலை மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த தேசிய மாணவா் படை, நாட்டு நலப்பணித் திட்டம், சாரணா் இயக்கம், பசுமை படை, நுகா்வோா் மன்றங்களைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்றனா். பேரணியில் பங்கேற்ற மாணவா்களுக்கு காவல் துணைக் கண்காணிப்பாளா் கே.வெங்கடேஷ் சான்றிதழ்களை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.