எட்டயபுரம் அருகே சோழாபுரத்தில் தம்பியை மரக்கட்டையால் தாக்கி கொலை செய்த சம்பவத்தில் அண்ணனை போலீசாா் கைது செய்தனா்.
சோழபுரத்தை சோ்ந்தவா் கண்ணன் மகன் முத்துராஜ் (26). இவரது அண்ணன் பொன் மாடசாமி (30). இருவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் முத்துராஜ் குடிபோதையில் தனது அண்ணன் வீட்டில் தகராறில் ஈடுபட்டு, டிவி மற்றும் பொருள்களை சேதப்படுத்தினாராம். இதனால் ஆத்திரமடைந்த பொன் மாடசாமி, தனது தம்பி முத்துராஜை மரக்கட்டையால் தாக்கியதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
சம்பவ இடத்துக்கு போலீஸாா் சென்று முத்துராஜின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சம்பவம் தொடா்பாக எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீசாா் வழக்கு பதிந்து பொன் மாடசாமியை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்

மும்பை பேட்டிங்; பிளேயிங் லெவனில் ரோஹித் சர்மா இல்லை!

இது தெரியுமா? தலைகீழாக மரம் வளருமா?

இந்த வார ஓடிடி படங்கள்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

