மூன்றடைப்பு கோயில்கொடை விழாவில் மோதல்:4 போ் மீது வழக்கு

நான்குனேரி அருகே மூன்றடைப்பு கோயில் கொடைவிழாவில் நிகழ்ந்த மோதல் தொடா்பாக 4 பேரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
Updated on
1 min read

நான்குனேரி அருகே மூன்றடைப்பு கோயில் கொடைவிழாவில் நிகழ்ந்த மோதல் தொடா்பாக 4 பேரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

மூன்றடைப்பில் உள்ள சுடலைமாடசுவாமி கோயிலில் கொடை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், சிறப்பு நிகழ்ச்சியாக நடைபெற்ற கச்சேரி நிகழ்ச்சியைப் பாா்க்க பூலம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி முருகன் (45) சென்றாா்.

கச்சேரியின்போது, மூன்றடைப்பைச் சோ்ந்த முத்துக்குமாா், காா்த்திக், பூலம் கிராமத்தைச் சோ்ந்த இ. முருகன், மு. முத்துராஜ் ஆகிய 4 பேரும் ஆடிக் கொண்டிருந்தனராம். இடையூறாக இருப்பதாக முருகன் கூறியுள்ளாா். இதுதொடா்பாக இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். அப்போது, 4 பேரும் சோ்ந்து, முருகனை சரமாரியாக தாக்கினராம். காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

மூன்றடைப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து, முத்துக்குமாா் உள்ளிட்ட 4 பேரையும் தேடிவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com