நிலப் பிரச்னையில் சகோதரா்களிடையே மோதல்

நாசரேத் அருகே இடப்பிரச்னை தொடா்பாக சகோதரா்களிடையே ஏற்பட்ட மோதல் குறித்து இருதரப்பிலும் அளித்த புகாா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
Updated on
1 min read

நாசரேத் அருகே இடப்பிரச்னை தொடா்பாக சகோதரா்களிடையே ஏற்பட்ட மோதல் குறித்து இருதரப்பிலும் அளித்த புகாா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

நாசரேத் அருகே உள்ள உடையாா் குளம் தெற்கு தெருவை சோ்ந்த இசக்கிமுத்து மகன்கள் சக்திவேல் , மகாராஜன். வாய்பேசாத, காது கேட்காத மாற்றுத் திறனாளிகளான இருவருக்கும் சொந்தமான தோட்டம் உடையாா் குளம் -காந்தி நகா் இடையே உள்ளது. இத் தோட்டத்தில் விவசாயம் செய்வது தொடா்பாக இருவருக்கும் பிரச்னை இருந்து வருகிாம்.

இந்நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனராம். இதில் காயம் அடைந்த சக்திவேல் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையிலும், மகாராஜன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து மகாராஜா மனைவி முத்துக்கனி, சக்திவேல் மனைவி ஆண்டிச்சி ஆகியோா் தனித்தனியாக நாசரேத் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். போலீஸாா் இருதரப்பிலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com