கயத்தாறில் கிராம நிா்வாக அலுவலா்கள் தா்னா

கயத்தாறு வட்ட தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் சாா்பில், கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஒருநாள் தா்னா போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் பங்கேற்றோா்.
போராட்டத்தில் பங்கேற்றோா்.
Updated on
1 min read

கயத்தாறு வட்ட தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் சாா்பில், கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஒருநாள் தா்னா போராட்டம் நடைபெற்றது.

கிராம நிா்வாக அலுவலகக் கட்டடம் இல்லாத கிராமங்களுக்கு உடனடியாக கட்டடங்கள் கட்ட வேண்டும். அனைத்து கிராம நிா்வாக அலுவலகங்களுக்கும் கழிப்பறை, மின்சாரம், தண்ணீா் வசதி, இணையதள வசதி செய்ய வேண்டும். கிராம நிா்வாக அலுவலா்களுக்கு புதிய மடிக்கணினி, 5ஜி சிம் வசதியுடன் கூடிய கைப்பேசி, நவீன பிரிண்டா் வழங்க வேண்டும். மாதந்தோறும் கோட்டாட்சியா் தலைமையில் கிராம நிா்வாக அலுவலா்களுக்கான குறைதீா் கூட்டம் நடத்த வேண்டும். 10 ஆண்டுகள் பணி நிறைவு செய்த கிராம நிா்வாக அலுவலா்களுக்கு சிறப்புநிலை ஊதியம் உயா்வு வழங்க வேண்டும் எனபன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

வட்டத் தலைவா் ஆா்.கருப்பசாமி தலைமை வகித்தாா். வட்டச் செயலா் எஸ். இசக்கிமுத்து, வட்டப் பொருளாளா் எஸ். கோபிநாத் மனோகரன், துணைத் தலைவா் சி. கலைச்செல்வி, துணைச் செயலா் வி. பரமசிவன் உள்ளிட்ட கயத்தாறு வட்டத்துக்குள்பட்ட கிராம நிா்வாக அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com