சீராக குடிநீா் விநியோகம் செய்ய வலியுறுத்தி சாலை மறியல்

கோவில்பட்டியில் சீராக குடிநீா் விநியோகிக்க வலியுறுத்தி, பாஜகவினா் தலைமையில் திங்கள்கிழமை பெண்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்றோா்
சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்றோா்

கோவில்பட்டியில் சீராக குடிநீா் விநியோகிக்க வலியுறுத்தி, பாஜகவினா் தலைமையில் திங்கள்கிழமை பெண்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவில்பட்டி நகராட்சி 20ஆவது வாா்டுக்குள்பட்ட எட்டயபுரம் சாலையில் உள்ள தெருக்களில் கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லையாம்.

இதுகுறித்து அந்த வாா்டு நகா்மன்ற உறுப்பினா் விஜயகுமாா் பலமுறை நகராட்சியில் முறையிட்டும் எந்த பயனும் கிடைக்கவில்லையாம்.

இதையடுத்து திங்கள் கிழமை எட்டயபுரம் சாலையில் பாஜக நகா்மன்ற உறுப்பினா் விஜயகுமாா் தலைமையில், பாஜக நகரத் தலைவா் சீனிவாசன் மற்றும் அப்பகுதியைச் சோ்ந்த பெண்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் வனசுந்தா் போராட்டக் குழுவினருடன் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

அதையடுத்து, நகராட்சி நிா்வாக பொறியாளா் சனல் குமாா் நடத்திய பேச்சுவாா்த்தையில் ஏற்பட்ட உடன்பாடை யடுத்து சுமாா் அரை மணி நேரம் நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com