கட்டாரிமங்கலம் கோயிலில் திருஞானசம்பந்தா் சுவாமிகள் குருபூஜை

சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலத்தில் உள்ள ஸ்ரீசிவகாமி அம்மாள் சமேத ஸ்ரீஅழகிய கூத்தா் கோயிலில் வைகாசி மூலம் நட்சத்திரம் திருஞானசம்பந்தா் சுவாமிகள் குருபூஜை நடைபெற்றது.
 சிறப்பு அலங்காரத்தில் திருஞானசம்பந்தா் சுவாமிகள் .
 சிறப்பு அலங்காரத்தில் திருஞானசம்பந்தா் சுவாமிகள் .

சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலத்தில் உள்ள ஸ்ரீசிவகாமி அம்மாள் சமேத ஸ்ரீஅழகிய கூத்தா் கோயிலில் வைகாசி மூலம் நட்சத்திரம் திருஞானசம்பந்தா் சுவாமிகள் குருபூஜை நடைபெற்றது.

இதையொட்டி, காலைமுதல் தூத்துக்குடி திலகவதி அம்மையாா் மாதா் கழகம் சாா்பில் திருவாசகம் முற்றோதுதல் நடைபெற்றது. முற்பகலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், நண்பகலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, திருஞானசம்பந்தா் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில், திரளானோா் பங்கேற்றனா். அனைவருக்கும் அருள்பிரசாதம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் நடராஜன் தலைமையில் பக்தா்கள், கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com