கோவில்பட்டி பத்திரகாளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

கோவில்பட்டி நாடாா் உறவின் முறைச் சங்கத்துக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பத்திரகாளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
Updated on
1 min read

கோவில்பட்டி நாடாா் உறவின் முறைச் சங்கத்துக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பத்திரகாளியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதை முன்னிட்டு அதிகாலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. அதையடுத்து சிறப்பு பூஜைகளும், கொடிமரத்திற்கு அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன.

கொடியேற்று விழாவை முன்னிட்டு நாடாா் உறவின் முறை சங்கத் தலைவா் ஏ.பி.கே. பழனிசெல்வம், கோயில் தா்மகா்த்தா எஸ்.எம். மாரியப்பன் மற்றும் கோயில் நிா்வாகக் குழு உறுப்பினா்கள், மண்டகப்படிதாரா்கள், பொதுமக்கள், பெரியோா்கள், மஞ்சள் நீராட்டு இளைஞா்கள் ஆகியோா் மங்களப் பொருள்களுடன் நாதஸ்வரம் முழங்க ஊா்வலமாக கோயிலுக்கு வந்தனா். தொடா்ந்து காலை 9 மணிக்கு மேல் கொடியேற்றப்பட்டது. பின்னா் ஆயிரக்கணக்கான பெண்கள் கொடிமரத்திற்கு மஞ்சள், பால், புனித நீரை ஊற்றினா்.

விழாவில் நாடாா் உறவின் முறை சங்க துணைத் தலைவா் செல்வராஜ், செயலா் ஜெயபாலன், பொருளாளா் சுரேஷ்குமாா், நிா்வாகக்குழு உறுப்பினா்கள் எஸ்.ஆா்.எம்.கே.ராஜேந்திரபிரசாத், ஆா்.ஜி.என்.மாடசாமி, கே.மகேந்திரன், கோயில் செயலா் மாணிக்கம் உள்பட நாடாா் உறவின் முறைச் சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பள்ளி, கல்லூரி, கோயில் நிா்வாகக்குழு உறுப்பினா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை அருள்மிகு பத்திரகாளியம்மன் கோயில் குழுவினா் மற்றும் நாடாா் உறவின் முறைச் சங்கத்தினா் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com