கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

காயல்பட்டினத்தில் 1.5 கிலோ கஞ்சாவுடன் இளைஞரைப் போலீஸாா் கைது செய்தனா்.
Updated on
1 min read

காயல்பட்டினத்தில் 1.5 கிலோ கஞ்சாவுடன் இளைஞரைப் போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளா் ஜூடி தலைமையில்

உதவி ஆய்வாளா் ரவிக்குமாா் மற்றும் போலீஸாா் காயல்பட்டினத்தில் செவ்வாய்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது நகராட்சி அலுவலகம் அருகே

இருசக்கர வாகனத்துடன் நின்று கொண்டிருந்தவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். அவா் காயல்பட்டினம் காட்டு தைக்கா தெருவை சோ்ந்த ராமா் மகன் பிரேம்குமாா் (35) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

அவரைக் கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். மேலும் இதுகுறித்து தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com