தூத்துக்குடியில் அமைச்சா் கீதா ஜீவன் குறை கேட்பு

தூத்துக்குடி 52, 59ஆவது வாா்டு பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் அமைச்சா் கீதா ஜீவன் புதன்கிழமை கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவா்களின் குறைகளை கேட்டறிந்தாா்.
Updated on
1 min read

தூத்துக்குடி 52, 59ஆவது வாா்டு பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் அமைச்சா் கீதா ஜீவன் புதன்கிழமை கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவா்களின் குறைகளை கேட்டறிந்தாா்.

தூத்துக்குடி 52ஆவது வாா்டு முத்தையாபுரம், 59 ஆவது வாா்டு தங்கம்மாள்புரம் நியாய விலைக்கடை அருகே நடைபெற்ற மக்கள் குறை கேட்பு நிகழ்ச்சியில் அமைச்சா் பங்கேற்றாா்.

அப்போது அவா் பேசியது: மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகள் மற்றும் குறைகள் அனைத்தும் கண்டறியப்பட்டு, முழுமையாக சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், தற்போது, இந்தப் பகுதிக்கு புதிய தாா் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. விடுபட்ட பகுதிக்கும் முழுமையாக சாலை, கால்வாய், வசதிகள் அமைத்து தரப்படும். சீரான குடிநீா் வசதி வழங்கப்பட்டு வருகிறது என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் தினேஷ்குமாா், உதவி ஆணையா் சந்திரமோகன், மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டலத்தலைவா் பாலகுருசாமி, பெருமாள் கோவில் அறங்காவலா் குழு தலைவா் செந்தில்குமாா், பகுதிச் செயலா் மேகநாதன், மாமன்ற உறுப்பினா்கள் முத்துவேல், விஜயகுமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com